இலங்கைக்கு வந்த வெளிநாட்டு விமானம் – இரகசியமாக அழைத்து செல்லப்பட்ட பிரபலம் யார்?

0

இன்று காலை சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு விமான அம்பியூலன்ஸ் ஒன்று வருகைதந்துள்ளது.

இந்த அம்பியூலன்ஸ் மூலம் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு  அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த அம்பியூலன்ஸ் முக்கிய பிரமுகர் ஒருவரை அழைத்துச் செல்ல வந்துள்ளதாகவும், அவர் தொடர்பான விபரங்கள் வெளிவரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகின்றது.

பல அரசியல் பிரமுகர்களும் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் சிங்கப்பூருக்குள் உள்நுழைய அனுமதி வழங்கப்படாத நிலையில் குறித்த சிறப்பு அம்பியூலன்ஸ் மூலம் சிங்கப்பூர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் ஒரு கொரோனா தொற்றாளியாக இருக்க முடியாது என அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.