இலங்கையர்கள் அனைவருக்கும் புதிதாக பிறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு பதிவாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் இந்த பிறப்பு சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய அதில் ஒவ்வொரு நபருடைய பிறப்பு முதல் இறப்பு வரையான தகவல்கள் அடங்கிய தரவுகள் கணினிமயமாக்கப்படும் என பதிவாளர் நாயகம் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உள்ள பிறப்பு சான்றிதழ் புதுப்பிக்கப்பட்டு புதிய தேசிய பிறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என பதிவாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.