இலங்கையிலும் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தல்!

0

குருநாகல் – மாவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தலால் பயிர்கள் சேதமடைந்துள்ளன என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

வெட்டுக்கிளிகளால் சோளம், வாழை, கொய்யா மற்றும் மா உள்ளிட்ட பயிர்கள் இவ்வாறு சேதமடைந்துள்ளன.

கடந்த 3 தினங்களுள் அதிகளவான வெட்டுக்கிளிகள் பரவியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆராய்வதற்கு விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குருநாகல் – மாவத்தகம பகுதிக்கு சென்றுள்ளார்.

கிருமிநாசினி பயன்படுத்தி வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி முதல் இந்தியாவில் தொடங்கிய வெட்டுக்கிளிகள் ஊடுருவல், தற்போது ராஜஸ்தான் மாநிலத்தின், 20 மாவட்டங்களில் பரவியுள்ளன.

கடந்த வருடம் 12 மாவட்டங்களில் மட்டும் பாதித்த நிலையில், இந்த ஆண்டு அங்கு அதன் பரவல் அதிகமாக உள்ள நிலையில், தற்போது இலங்கையிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.