இலங்கையில் மேலும் பல பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

0

மட்டக்களப்பு- காத்தான்குடி பொலிஸ் பிரிவின் பல்வேறு பகுதிகளில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவு நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி காத்தான்குடி பொலிஸ் பிரிவின் சின்னத்தோனா வீதி, முஅத்தினார் வீதி, கபூர் வீதி, டெலிகொம் வீதி, 1ஆம் குறுக்கு வீதி ஆகிய பகுதிகள் நாளை முதல் தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.