எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு

0

எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட் கிழமை முதல் சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு பொதுப் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. 

இன்று முற்பகல் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் குறித்த அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது, எதிர்வரும் தினங்களில் பொதுமக்களின் நடத்தை, கொவிட் 19 தொற்று நிலைமை மற்றும் சுகாதார பிரிவினால் பெற்றுக் கொடுக்கப்படும் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு எதிர்வரும் திங்கட் கிழமை (08) முதல் பொது போக்குவரத்து சேவையை வழமைப் போல் நடாத்திச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.