கருணாவைக் கைது செய்யுமாறு கோரி மனு தாக்கல்

0

முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.