கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை நடைபெறும் திகதி குறித்த அறிவிப்பு வெளியானது!

0

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை நடைபெறும் திகதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு   ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை நடாத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சினால் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2020 ஆம் ஆண்டுக்கான  மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை  எதிர்வரும் டிசம்பர்  மாதம் 24ஆம் திகதி முதல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  4 ஆம் திகதி வரை  வழங்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் இந்த தீர்மானத்தினை அறிவித்துள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.