கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவது குறித்து மாணவர்கள் மத்தியில் ஆய்வு

0

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவது குறித்து மாணவர்கள் மத்தியில் ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 6ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக 200 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் நேரடியாக மாணவர்களிடம் சென்று இது குறித்து வினவி ஆராய்ந்ததன் பின்னரே இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பரீட்சை திகதி குறித்து எந்தவொரு மாணவரும் குழப்பமடையத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.