கைது செய்யப்பட்டவர்களை புனர்வாழ்வளிப்பதற்கான புதிய விதிமுறைகளுடன் கூடிய வர்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (சனிக்கிழமை) வெளியாகியுள்ளது.
தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை புனர்வாழ்வளிக்கும் புதிய ஏற்பாடுகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.