கொரோனா அச்சுறுத்தல் – கண்டி நகரின் அனைத்து பாடசாலைகளும் நாளை முதல் மூடப்படுகின்றன

0

கண்டி நகர எல்லையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை 26 முதல் டிசம்பர் 04 வரை மூடப்படும் என்று மத்திய மாகாண ஆளுநர் அறிவித்தார்.

கண்டியில் தற்போதைய கோவிட் நிலைமை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கண்டியில் 45 பாடசாலைகள் நாளை முதல் மூடப்படும்.

மத்திய மாகாணத்தில் உள்ள கண்டி, மகியாவ, நுவர எலியா-மஸ்கெலியா பகுதிகளில் இருந்து பல புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டதாக கோவிட் செயலணி நேற்று அறிவித்தது.