கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 21 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய இதுவரையில் 559 பேர் கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன், இதுவரை 981 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 413 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.