கொரோனா வைரஸ் தொற்று – மொத்த எண்ணிக்கை 256 ஆக உயர்வு

0

நாட்டில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 256 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை இன்று கொரோனா வைரஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட மேலும் 05 பேர் குணமடைந்தனர் என்றும் இதுவரை 91 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.