காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை கொரோனா வைரஸ் தாக்கம் குறைவடையும் வரை நீடிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மஹிந்த அமரவீர மோட்டார் வாகன திணைக்களத்தை இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த மாதம் 10ஆம் திகதி நிறைவடைந்த சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான காலம் இம்மாதம் 15 ஆம் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.