கொரோனா வைரஸ் பரவலானது மீண்டும் ஏற்படாதிருக்க மக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி செயற்படுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
இல்லையொன்றால், மீண்டும் நாட்டுக்குள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் ஆபத்து காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஒன்று கூடி உணவு உண்பதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.