
ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணை செய்வதா இல்லையா என நாளை அறிவிக்க உள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நாளை மாலை 3 மணிக்கு குறித்த தீர்மானத்தை அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழுவினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மனுக்கள் மீதான விசாரணை பத்தாவது நாளாகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.