மட்டக்களப்பில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு நிவாரண உதவி

0

மட்டக்களப்பில் ஊரடங்குச் சட்டத்தினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடி, எருவில் பகுதியிலுள்ள முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு  உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) களுவாஞ்சிகுடி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான மேகசுந்தரம் வினோராஜ், தனது சொந்த நிதியிலிருந்து 80 முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு உலர் உணவுப் பொதிகளை இதன்போது வழங்கி வைத்தார்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக கடந்த ஒருமாத காலமாக ஊரடங்குச் சட்டத்தின் கீழ் மக்கள் வாழ்ந்து வந்தனர். இதனால் கூலித் தொழிலாளர்கள் தொடக்கம், ஏனைய சுய தொழில் செய்பவர்களும் வருமானம் இன்றி தமது வாழ்வாதாரத்தை இழந்தனர்.

இவ்வாறானவர்களுக்கு, பல பொது அமைப்புக்களும், தனிநபர்களும், தனவந்தர்களும், மக்கள் பிரதிநிதிகளும், தங்களாலான நிவாரணப் பொதிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.