அச்சுறுத்தும் கொரோனா – நத்தார் பண்டிகை குறித்த தீர்மானம் அடுத்த வாரம்!

0

தனிமைப்படுத்தல் குறித்து, மேல் மாகாணத்தில் உள்ள மக்கள் அச்சமடையத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தடுப்புக்கான செயலணியின் பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்கள் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை டுப்பதே எப்போதும் சிறந்தது எனவும் இராணுவத்தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நத்தார் பண்டிகைக்குச் சில வாரங்களே உள்ள நிலையில், இது தொடர்பாக அடுத்த வாரமளவில் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் அதிகமாக ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் வகையில் மேலதிக சுகாதார வழிகாட்டுதல்களை அமுல்படுத்த வேண்டுமா என்பது குறித்து அதன்போது தீர்மானிக்கப்படும் எனவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து இந்த மாத இறுதிக்குள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் என சுகாதார அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளதாகவும் இராணுவத்தளபதி தெரிவித்துள்ளார்.