அத்தியாவசிய பொருட்களை பொது மக்கள் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறை!

0

பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் உள்ள இந்தக் காலப்பகுதியில் பொது மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சிறப்பு அங்காடிகள், ச.தொ.ச மற்றும் ஏனைய நிறுவனங்களால் இணையத்தளம் ஊடாக பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்தக் காலப்பகுதியில் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ள அதேவேளை, அரச ஒளடத கூட்டுத்தாபனத்தின் இணையத்தளம் ஊடாக வீடுகளுக்கே மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ரீதியில் அதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றை www.spc.lk   என்ற இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ச.தொ.ச ஊடாக நாளை முதல் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி 1998 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து அல்லது sathosa.lk  என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து தேவையான பொருட்களை முன்பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.