அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தில் அவர்களின் அனுமதியின்றி பிடித்தம் செய்தமை குறித்த பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவிடம் பலர் முறைப்பாடு செய்துள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிக உடகம தெரிவித்துள்ளார்.
தங்களின் அனுமதியின்றி தங்களின் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளமை குறித்து எங்களிற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ள அவர் குறிப்பாக அரசதுறை அதிகாரிகள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ளார்.
மாகாணமட்டத்தில் உள்ள அதிகாரிகள் அரசாங்க ஊழியர்களை கொவிட் 19 நிதியத்திற்கு நிதி உதவி வழங்குமாறு கோருவது குறித்த பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கல்வித்துறை அதிகாரிகள் குறித்து அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் அனுமதியின்றி சம்பளத்தில் பிடித்தம் செய்தமை குறித்த முறைப்பாடுகள் உறுதியானால் இது குறித்து விசாரணை செய்யும் அதிகாரம் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.