அரச இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறியவர் சிக்கினார்!

0

ஜனாதிபதி அலுவலகம் உள்ளடங்களாக சில அரச இணையத்தளங்களில் சைபர் தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறி பொய்யான தகவல்களை பரப்பினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று (திங்கட்கிழமை) மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் சைபர் தாக்குதல் இடம்பெற்றதாக கூறி பகிரப்பட்ட தகவல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.