இரா.துரைரட்ணசிங்கத்திற்கு இணைய வழி ஊடாக கூட்டமைப்பினர் அஞ்சலி!

0

திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.துரைரட்ணசிங்கத்திற்கு இணைய வழி ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

குறித்த நிகழ்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின், ஏற்பாட்டில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன் த.கலையரசன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், யோகேஸ்வரன், சாந்தி சிறீஸ்கந்தராசா தமிழரசுக் கட்சியின் செயலாளரும்  வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான வைத்திய கலாநிதி சத்தியலிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி மற்றும் இரா.துரைரட்ணசிங்கத்துடன் கல்விப்பணி செய்தவர்கள் மற்றும் அவர்களது மாணவர்கள் எனப் பலரும் கருத்து வெளியிட்ட நிலையில், நன்றியுரையினை இரா.துரைரெட்ணசிங்கத்தின் மகள் மற்றும் மருமகள் ஆகியோர் வழங்கினர்.