இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்கப்படுவதாக அறிவித்தது அமெரிக்கா!

0

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவி செய்யும் வகையில், 6 மில்லியன் டொலர் அவசர நிதியுதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தினால் இன்று(16) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளிம்புநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த அவசர நிதியுதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.