இலங்கையில் காதலர் தின நிகழ்வுகளை நடத்த தடை

0

எதிர்வரும் 14ம் திகதி காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சமூக வலைத்தளங்களின் ஊடாக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

பல்வேறு குழுக்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

சுகாதார பிரிவின் அனுமதியின்றி, சட்டவிரோதமாக அவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும் பட்சத்தில், நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிகழ்வுக்கு வருகைத் தந்த அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், இளைஞர், யுவதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.