இலங்கையில் தமிழர்களுக்கும் சம உரிமை உள்ளதை வலியுறுத்தும் ஒரேகட்சி கூட்டமைப்பே- இரா.சாணக்கியன்

0

இலங்கையில் தமிழர்களுக்கும் சம உரிமை உள்ளது என்பதை வலியுறுத்திவரும் ஒரே கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பே என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில், இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் கூறுகையில், “தற்போது கிழக்கில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் கிழக்கினை மீட்கப் போவதாக கூறுகின்றன.

ஆனால், இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கு சம உரிமை உள்ளது என தொடர்ந்து வலியுறுத்திவரும் ஒரே கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமேயாகும்.

நான் தற்போது வசிக்கின்ற வீட்டிற்கு பல்வேறு கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வந்துள்ளன. அவற்றில் எந்தவொரு விஞ்ஞாபனத்திலும் இந்த நாடு தமிழனுக்கும் சொந்தமானது என்று சொல்லப்படவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.