இலங்கையில் மேலும் 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

0

இலங்கையில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, கம்பஹா, காலி , இரத்தினப்புரி ஆகிய மாவட்டங்களின் 11 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் முழு விபரம்

கம்பஹா

  • திவுலப்பிட்டிய பொலிஸ் அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட பலுகஹாவெல கிராம சேவகர் பிரிவு

காலி

  • அஹங்கம பொலிஸ் அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட கரதுன்கொட, கொவியபான, கஹவன்னாகம மற்றும் தொம்மன்கொட ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்
  • ஹபராதுவ பொலிஸ் அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட லுனுமோதர, பொனவிஸ்டா, கட்டுகுருன்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகள்

இரத்தினப்புரி 

  • பெல்மடுல்ல பொலிஸ் அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட தெனவக பாதகட மற்றும் திப்பிடிகல கிராம சேவகர் பிரிவுகள்
  • குருவிட்ட பொலிஸ் அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட குருவிட்ட கிராம சேவகர் பிரிவு தெல்கமுவ கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நகரப்பகுதி

இதேவேளை, நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு

  • பாதுக்கை பொலிஸ் அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட உக்கல கிராம சேவகர் பிரிவு

அம்பாறை

  • தெஹியத்தகண்டி பொலிஸ் அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட தெஹியத்தகண்டிய கிராம சேவகர் பிரிவு

நுவரெலியா 

  • ஹட்டன் பொலிஸ் அதிகாரப் பிரிவுக்கு உட்பட்ட போடைஸ் கிராம சேவகர் பிரிவு
  • கொனகல்ல மற்றும் 30 ஏக்கர் ஆகிய பகுதிகள்