இலங்கை மக்களை அச்சுறுத்தும் மற்றுமொரு ஆபத்து! மக்களே அவதானம்

0

இந்த வருடத்தில் மாத்திரம் 2800 பேர் எலி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.

அத்தோடு பாதிக்கப்பட்டவர்களுள் 12 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கை தொற்றுநோயியல் பிரிவினால் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறிப்பாக இலங்கையில் இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே எலிக்காய்ச்சலால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இதை அடுத்து மக்களை வைத்தியர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய வாரத்திற்கு ஒருமுறையேனும் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ளது.