உயர் தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை

0

இம்முறை நடைபெறவுள்ள உயர் தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லையென்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை கவனத்தில்கொண்டு உயர் தர பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இன்று தெரிவித்தார். 

எந்த மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவகையில் உயர் தர பரீட்சையை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்தார்.