உயர் தர பரீட்சை உதவி நிலையப் பொறுப்பதிகாரிக்கு கொரோனா

0

மத்துகம சி.டப்ளியு. டப்ளியு. கன்னங்கர மத்திய மகா வித்தியாலயத்தின் உயர் தர  பரீட்சை மண்டப நிலைய உதவிப் பொறுப்பாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட 8 பேரை தனிமைப்படுத்தியுள்ளதாக மத்துகம வலயக் கல்விப் பணிப்பாளர் லால் திசாநாயக்க தெரிவித்துள்ளார். 

அவர்களுக்காக புதிய பொறுப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை நிலையம் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

எனினும் தொடர்ந்தும் பரீட்சைகளை நடாத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.