இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலின் தற்போதைய நிலைமை குறித்து நாளைய தினமே முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் மிகவும் தீர்மானமிக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்று வரும் அமைச்சரவை கூட்டத்தின் முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் முடிவுகள் நாளைய தினம் வெளியாகவுள்ளன.
இந்த நிலையில், குறித்த பரிசோதனை முடிவுகளைக் கொண்டே உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகள் தொடர்பான இறுதி தீர்மானத்தை கல்வி அமைச்சு எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் எதிர்வரும் 48 மணித்தியாலங்கள் மிகவும் தீர்மானமிக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்த மக்கள் சுய சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்றுதல் அவசியம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு பிரப்பித்தல் தொடர்பாக இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.