ஒக்டோபர் 09 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை

0

அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு ஒக்டோபர் 09 ஆம் திகதி முதல் இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் 09 ஆம் திகதி மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.