ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள் குறித்த முக்கிய விடயத்தினை வெளியிட்டார் ஜனாதிபதி!

0

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்திற்குட்பட்டு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள், சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு உள்வாங்கப்படமாட்டார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள்   சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு உள்வாங்கப்படவுள்ளதாக வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வறுமையில் இருந்து உயர்த்தும் நோக்கில் குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுப்பதற்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தெரிவு செய்யப்பட்டவர்கள், மருத்துவமனைகள் பாடசாலைகள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களில் பணியாளர்களாக செயற்படுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், அதற்கான நியமனங்களும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், அவர்கள் சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு உள்வாங்கப்படமாட்டார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.