ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்

0

அம்பாறை –  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே சூலில் 3 குழந்தைகளை பெண்மனி ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.

பிரவச வலி என தெரிவித்து, 28 வயதுடைய கோமாரி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று (வியாழக்கிழமை)  குறித்த பகுதியிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், திருக்கோவில், அக்கரைப்பற்று வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

அதன்பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு சத்திர சிகிச்சை மூலம் ஒரு சூலில் 3 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். தற்போது குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த சத்திர சிகிச்சையினை மகப்பேற்று வைத்திய நிபுணர் ராஜிவ் விதானகே தலைமையிலான வைத்திய குழுவினர் மேற்கொண்டனர்.

இதில் மூன்று ஆண் குழந்தைகளும் தலா 1800 கிராம், 2190 கிராம், 2240 கிராம் நிறையுடன் ஆரோக்கியமாக உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேபோன்று கடந்த மாதமும் இதே வைத்தியசாலையில் ஒரே சூலில் 3 குழந்தைகளை நிந்தவூரை சேர்ந்த பெண்மனி ஒருவர் பெற்றெடுத்தமை குறிப்பிடத்தக்கது.