கடந்த 24 மணித்தியாலங்களில் 1724 பேர் கைது!

0

ஊரடங்குச் சட்டத்தை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 19 ஆயிரத்து 441 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய ஆயிரத்து 724 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 496 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5082 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.