கந்தளாயில் குடிநீர்  குழாய் உடைந்து கடந்த பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் விரையமாவதாக விசனம்!

0

திருகோணமலை – கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட கந்தளாய் நகரில் பிரதான வீதியில் செல்லும் குடிநீர்  குழாய் உடைந்து கடந்த பத்து நாட்களுக்கு மேலாக குடிநீர் விரையமாகிச் செல்வதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கந்தளாய் பிரதேசத்தில் பிராந்திய குடிநீர் சுத்திகரிக்கும் அலுவலகம் காணப்படுகின்றது.

கந்தளாய் குழாய் நீர் பிராந்திய அலுவலகத்தில் சேவையாற்றும் பல்வேறு அதிகாரிகள்  கந்தளாய் பிரதான வீதியில் விரையமாகி ஓடிக்கொண்டிருக்கும் குடிநீரினை கண்டும் காணாதது போல் செல்கின்றனர்.

இவ்வாறு விரையமாகிச் செல்லும் குடிநீர் வீதியின் நெடுகிலும் ஓடிச் செல்வதால் பிரதான வீதியில் பயணிப்போர் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக குறிப்பிடப்படுகின்றது.

எனவே இவ்வாறு குடிநீர் விரையமாவதை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.