கல்முனை பிராந்தியத்தில் இதுவரை 79 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா!

0

கல்முனை பிராந்தியத்தில் இதுவரை 79 கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்றில் 15 பேரும் பொத்துவிலில் 13 பேரும் சம்மாந்துறையில் 11 பேரும் ஏனைய பிரதேசங்களில் 10க்கும் குறைந்த கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேநேரம், கல்முனைப் பிராந்தியத்துக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கென ஒரு இலட்சத்து 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றை 13 சுகாதாரப் பிரிவுகளிலும் உள்ள மக்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கி தடுப்பூசிகளை ஏற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.