கொரோனா இன்னும் சமூக தொற்றாகவில்லை

0

இலங்கையில் கொரோனா தொற்று இதுவரை சமூக தொற்றாகவில்லை என, தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சிறந்த சுகாதார கட்டமைப்பு இருப்பதால் கொரோனா தொற்றுக்கு முகம் கொடுக்கவும் அதனைக் கட்டுப்படுத்தும் நிலை காணப்படுவதாகவும் எனவே தொற்றாளர்களுக்கு ஒருபோதும் அசௌகரியம் ஏற்படாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட மற்றும் பேலியாகொட கொரோனா கொத்தனி பாரியதொன்றென்றும், இதன்மூலம் நாட்டின் பல பிரதேசங்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென்றும் அவர் ​மேலும் தெரிவித்துள்ளார்.