கொரோனா ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் புதிய வர்த்தமானி!

0

கொரோனா ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட எதிர்பார்க்கப்படுகின்றது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா ஒழிப்பிற்காக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் 135 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.