கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 707 ஆக அதிகரிப்பு

0

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 707ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது

இதேவேளை, இதுவரையில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.