கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

0

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் நேற்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஓமானிலிருந்து நாடு திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 382 ஆக அதிகரித்துள்ளது.

136 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் இருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.