கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு!

0

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய, கொரோனா தொற்றினால் மேலும் 51 உயிரிழப்புகள் நேற்று(வியாழக்கிழமை) பதிவு செய்யப்பட்டுள்ளன.

20 பெண்கள் மற்றும்  31 ஆண்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 425 ஆக அதிகரித்துள்ளது.