கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 143 ஆக அதிகரிப்பு!

0

நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 143 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) மாத்திரம் 21 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 17 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 173 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.