கொரோனா தொற்று – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரிப்பு

0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 09 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க இதனை தெரிவித்தார்.

இதன் காரணமாக இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினத்தில்(17) மாத்திரம் புதிதாக 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.