கொரோனா வைரஸ் – பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட ரீதியான விபரம்

0

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் கொழும்பில் மட்டும் இதுவரை 160 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு இன்று (சனிக்கிழமை) காலை வெளியிட்டுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 690 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 172பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அந்தவகையில் தற்போது கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட ரீதியான தகவல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி கொழும்பில் 160 பேர், களுத்துறை 65, கம்பஹா 53, புத்தளம் 41, குருநாகல் 27, யாழ்ப்பாணம் 16, கண்டி 15, அனுராதபுரத்தில் 12, இரத்தினபுரி மற்றும் கேகாலையில் தலா 8 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை மொனராகல 04 பேரும் ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளையில் தலா 03 பேரும் மாத்தறை, கல்முனை, வவுனியா மற்றும் திருகோணமலையில் தலா 02 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை காலி, மட்டக்களப்பு, மாத்தளை, பொலன்னறுவை பகுதிகளில் தலா ஒருவரும் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை தனிமைப்படுத்திய மையங்களில் 41 பேரும் இலங்கை திரும்பியிருந்த 03 வெளிநாட்டு பிரஜைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் வெலிசறை கடற்படை முகாமில் 217 பேரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகாளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களின் கடற்படையினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 296 பேர் அடங்குவதாகவும் முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி மற்றும் நுவரெலியாவில் எவரும் தொற்றுக்குள்ளாகவில்லை என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.