கோப் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் இரா.சாணக்கியன் – ஏனைய உறுப்பினர்களின் பெயர் பட்டியலும் வெளியானது!

0

9 ஆவது நாடாளுமன்றின் அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள 22 உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மஹிந்த அமரவீர, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, சுனில் பிரேமஜயந்த, ஜயந்த சமரவீர, திலும் அமுனுகம, இந்திக அனுருத்த, சரத் வீரசேகர, டி.வி.சானக்க, நாலக கொடஹெவா, அஜித் நிவாட் கப்ரல், ரவூப் ஹக்கீம், அனுரகுமார திஸாநாயக்க, சம்பிக்க ரணவக்க, ஜெகத் புஷ்பகுமார, எரான் விக்ரமரட்ன, ரஞ்சன் ராமநாயக்க, நளின் பண்டார, எஸ்.எம்.மரிக்கார், பிரேம்நாத் சி தொலவத்த, இரா.சாணக்கியன், சரித ஹேரத் ஆகியோரே குறித்த குழுவின் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.