சபாநாயகர் தலைமையில் இன்று கூடுகின்றது அரசியலமைப்புப் பேரவை

0

அரசியலமைப்புப் பேரவை 8வது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெறவுள்ளது.

இன்று(வியாழக்கிழமை) சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாட்டின் தற்போதைய அசாதாரணமான நிலையினை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்தினைக் கூட்டுமாறு எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.