சவுதியில் கொரோனாவினால் 28 இலங்கையர்கள் மரணம்

0

சவுதி அரேபியாவில் தொழில் தேடிச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரக வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

கடந்த நான்கு மாதங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்த 28 பேரில் இரண்டு வீட்டுப் பணிப்பெண்களும் அடங்குகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் அந்த நாட்டினதும், சர்வதேசத்தின் சட்டத்தின்படியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.