சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

0

ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த தொண்டு நிறுவனமொன்றின் உரிமையாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது அரச சார்பற்ற நிறுவனத்தின் இளைஞர்கள் குழுவுக்கு அடிப்படைவாத போதனைகள் மற்றும் ஆயுதப் பயிற்சியை வழங்க அவர் சஹ்ரான் ஹாசிமிற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர் கல்பிட்டிய பிரதேசத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.