சி.மூ.இராசமாணிக்கத்தின் 46வது நினைவு தினம் அனுஷ்டிப்பு!

0

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.மூ.இராசமாணிக்கத்தின் 46வது நினைவு தினம் நேற்று(புதன்கிழமை) களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் இல்லத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

சி.மூ.இராசமாணிக்கத்தின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன், மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

செட்டிபாளையம் திலகவதியார் மகளிர் இல்ல மாணவியருக்கு ஒருவேளை உணவும் வழங்கப்பட்டதுடன் பல்கலைக்கழக மாணவன் ஒருவருக்கான கல்விக்கான ஊக்குவிப்பு தொகையும் வழங்கி வைக்கப்பட்டது.

சி.மூ.இராசமாணிக்கம் 1947ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்று தேர்தல்களில் வெற்றிபெற்று தமிழ் மக்களின் பிரதிநியாக செயற்பட்டிருந்ததுடன், சுமார் 22 வருட அரசியல் அனுபவத்தினைக் கொண்டு மக்களுக்கான அரும் பணிபணிகளை ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.