சீனக்குடா பகுதியில் விபத்து- இருவர் காயம்

0

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதியிலுள்ள சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இருவரும், சிகிச்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திருகோணமலையில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த அம்பியூலன்ஸ் வண்டியும் கிண்ணியாவில் இருந்து திருகோணமலை நோக்கி  பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது அம்பியூலன்ஸ் சாரதிக்கும் லொறியின் சாரதிக்கும் காயம் ஏற்பட்டமையினால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சீனக்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.