சீனாவில் இல்லை.. என் உடலில் கொரோனா! மார்ச் மாதம் இருக்காது..

0

கொரோனா பரவியதற்கு காரணம் சீனா இல்லை, நான் தான் பரப்பினேன் என்றும் நான் மனித உருவில் உள்ள கொரோனா என்றும் சித்தூரில் நரபலி கொடுத்த பத்மஜா தெரிவித்துள்ளார்.

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வந்தவர்கள் புருஷோத்தம் நாயுடு- பத்மஜா தம்பதி.

இதில் புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும் பத்மஜா தனியார் கல்லூரி நிறுவனத்தின் பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

அவர்களின் மூத்த மகள் அலெக்கியா (27) மேனேஜ்மென்ட் ஆப் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் படித்து வந்தார்.

இளைய மகள் சாய் திவ்யா (22) ஏ.ஆர். ரஹ்மானின் இசை கல்லூரியில் பயின்று வந்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இவர்கள் இருவரையும் உடற்பயிற்சி செய்யும் கருவியால் தலையில் அடித்து பெற்றோரே கொன்றுள்ளனர்.

பின்னர் அவர்களை நிர்வாணப்படுத்தி பூஜை அறையில் வைத்து ஏதோ பூஜை செய்துள்ளனர்.

இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். போலீஸார் விசாரணை நடத்திய போது அவர்களை பார்த்து பத்மஜா கூச்சலிட்டுள்ளார்.

பின்னர் நான்தான் சிவன். கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து வரவில்லை.

எனது உடல் பாகத்திலிருந்து வந்தது. நான் மனித உருவில் இருக்கும் கொரோனா.

வரும் மார்ச் மாதம் கொரோனா போய்விடும். தடுப்பூசியெல்லாம் போட்டுக்காதீங்க என கூறிய பத்மஜாவை சமாதானப்படுத்த புருஷோத்தமன் முயன்ற போது என்னை தொடாதே நீ இப்போது என் கணவர் இல்லை. நான் சிவன் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் எங்கள் மகள்களின் உடலில் தீயசக்தி சென்றுவிட்டது.
அதை கொல்வதற்காகத்தான் இப்படி செய்தோம். தீயசக்தி இருந்ததால்தான் அவர்கள் உடனே இறக்காமல் பல மணி நேரமாக இழுத்துக் கொண்டு கிடந்தார்கள் என்றார்.
அப்போது புருஷோத்தமன் கூறுகையில் நான் ஒன்றும் முட்டாள் இல்லை, பிஎச்டி முடித்தவன். எங்களுக்கு தகவல் வந்தபடி செய்தோம் என சர்வசாதாரணமாக கூறியுள்ளார்.